எவருக்குமே தன் இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது என்பது இனிய விஷயமே.
பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டு அதனைப் பதிவு செய்ய
உத்தேசித்துள்ளேன்.
எனது கல்விக்கு உதவிய கல்வி
நிறுவன்ங்கள் மூன்று. முதலாவதாக மதுரை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளி (5 ஆம்
வகுப்பு வரை), அடுத்ததாக மகாகவி பாரதியார், (மூன்று/நான்கு மாத காலமே) பணியாற்றிய,
மதுரையின் புகழ் பெற்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளி (12 ஆம் வகுப்பு வரை). மூன்றாவதாக
பட்டப் படிப்பு மதுரை சௌராஷ்ரா கல்லூரி.
மதுரை மாநகராட்சிப் பள்ளியில் உரிய
வயதிற்கு முன்னரே எனது பெற்றோர் சேர்த்து விட்டனர். Admission இல்லாமல் முதல்
வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். நான் என்
வீட்டில் குடி இருந்த மோகன் என்பவனு(ரு)டன் பள்ளி சென்று கொண்டு இருந்தேன். நான் இரண்டாம் வகுப்பு செல்லப் போகிறேன் என
நினைத்துக் கொண்டு இருக்கையில், மோகனை மட்டும் இரண்டாம் வகுப்பிற்கு
மாற்றினார்கள். என்னை மாற்றவில்லை. வீட்டில் வந்து அழுதேன். அப்பொழுதுதான்
சொன்னார்கள், இனிமேல்தான் நீ ஒன்றாம் வகுப்புப் படிக்கப் போகிறாய் என்று.
முதல் முதலாம் வகுப்பின் ஆசிரியை
யாரென்று நினைவில்லை. முதலாம் வகுப்பின் ஆசிரியை “பஞ்சவர்ணம் டீச்சர்”. நல்ல
உயரமாக இருப்பார், நன்றாகப் பாடம்
நடத்துவார், அன்பாக இருப்பார். எங்கள் வீட்டின் வழியாகத்தான் அவர் வீட்டிற்கு
செல்வார். ஓடி ஓடி சென்று “வணக்கம் டீச்சர்” சொல்வது சந்தோஷம் தந்தது, கால
ஓட்டத்தில் வணக்கம் சொல்வது நின்று போனது.
அவர்கள் அணிந்து இருந்த வெள்ளி கொலுசு என் அம்மாவிற்கு நகைச்சுவையான விஷயம்
(அவர்களின் உயரமான தோற்றத்திற்கு அது பொருத்தமில்லை என்பது அம்மாவின் எண்ணம்.
ம்ம்ம்.. பெண்களின் குணம் J )
என் அண்ணன், மற்றும் வீட்டில் குடியிருந்த
அனைவருக்கும் அதுதான் முதல் பள்ளி.
தொடக்கப் பள்ளிக் காலத்தில் பாடிய
கடவுள் வாழ்த்துப் பாடல்:
தேவே உன்னைப் போற்றிடுவேன், தினமும் என்னைக் காத்திடுவாய்
நாவால் உன்னை நான் பாட, நல்லத்
தமிழை தந்திடுவாய்.