
மதுரை தோழன் தினேஷ் அனுப்பிய ஒரு சிறு sms கதை.

மூளைக் கட்டியினால் அவதியுற்ற ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளின் சுற்றத்தாரும், சிறிய வயது மகனும், மற்றோரும் அவளை சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து, அவள் உயிர் பிரிந்து விடுகிறது. தாயின் பிரிவு தாங்காமல் மகன் கதறி அழுகின்றான். நாள் முழுதும் அழுத காரணத்தினால் உடல் நலக் குறைவும் ஏற்படுகிறது. அவளின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடித்தப் பின் வீட்டிற்கு வந்தபின், அச்சிறுவன் தாயின் அலமாரியினைத் திறந்துப் பார்க்கின்றான். அங்கே அவன் தாய் ஒரு மருந்துப் பட்டியுடன், சிறு கடிதம் ஒன்றும் எழுதி இருக்கிறாள். "மகனே, நீ அதிகம் அழுதால் உனக்கு சளிப் பிடிக்கும். நீ நேற்று அதிகம் அழுது இருப்பாய் என்று தெரியும், இந்த மருந்தினை எடுத்துக் கொள். இனி அதிகம் அழாதே" என்று எழுதி இருந்தது.
இதுவே தாயின் அன்பு.
இதுவே தாயின் அன்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக