சமீபத்தில் தாம்பரம் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. அங்கு m500 பேருந்தில் ஏறினேன். அதில் 70 வயது மதிக்கத் தக்க ஒரு மூதாட்டி பேருந்தின் தரையில் மிகவும் சிரமத்துடன் அமர்ந்து இருந்தார். அவர் அமர்ந்து இருந்த இடத்தின் அருகில் கல்லூரி செல்லும் ஒரு இளம் பெண் அமர்ந்து இருந்தாள். நான் நினைத்தேன் சரி அப்பெண் மிகத் தொலைவு செல்கிறாள் போலும், எனவேதான் சீட்டில் இடம் தரவில்லை, இடி மன்னர்களின் தொந்தரவின் காரணமாக கூட அவ்வாறு செய்து இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அப்பெண் ஒன்றரை கிலோ மீட்டர் கூட இல்லாத அடுத்த நிறுத்தத்தில் இறங்கியதை கண்டேன். பிறகு அவ்விடத்தில் அம்மூதாட்டி அமர்ந்து கொண்டார். இரண்டு கிலோ மீட்டர் கூட இல்லாத அப்பயணத்தில் ஒரு வயதானவர் சிரமப்படுவதைக் கண்டும் மனம் இறங்காத அப்பெண் எதிர் காலத்தில் தன் வாழ்க்கையை எப்படி நடத்தி செல்வார் என்ற கேள்வியும் என் மனதில் பிறந்தது. ஸஹ மனிதர்களிடம் சிறிதளவும் கருணை இல்லாத இப்பெண் பெண் சமூகத்தின் சாபம் என்றே கருதினேன். இது போன்ற எத்தனையோ பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் குறைந்த பட்சம் வயதான, உடல் ஊனமுற்றோர் மற்றும் உடல் உபாதை உள்லோருக்கேனும் இடம் அளிக்க முன்வர வேண்டும். இவர்களிடம் மனித நேயம் மலர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இவர்களால் வளர்க்கப் படும் எதிர்கால சந்ததிகள் எவ்வளவு கொடூரமாக இருப்பார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இவர்களின் மனம் திருந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக