பக்கங்கள்

வியாழன், ஜூன் 26, 2008

நட்பு

போர்களத்தில் நண்பன் படுகாயமுற்றான் என ஒரு போர்வீரனுக்கு தகவல் வருகிறது. தன் நண்பனை போர்களத்தில்இருந்து அழைத்து வர கிளம்புகின்றான். அவன் தலைவன் சொல்கின்றான் உன் நண்பன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை, நீ செல்வது பயனற்றது என்றான். ஆனால் அவன் தன் நண்பனை அழைத்து வர போர்க்களம் சென்று, அவனை எடுத்து வந்தான் பிணமாக. தலைவன் சொன்னான் நான் சொன்னது சரியாயிற்றா நீ சென்றது வீண்தானே என்றான். போர்வீரன் சொன்னான், இல்லை நான் சென்றது வீணாகவில்லை. என் நண்பன் என்னை கண்டதும் நீ வருவாய் என எனக்கு தெரியும், நன்றி என்று சொல்லித்தான் மரித்து போனான் என்றான். இக்கதையினை எனது நண்பர் திரு சீனிவாசன் (Shalom Mansion) அவர்கள் அனுப்பினார்கள்.

செவ்வாய், ஜூன் 24, 2008

அன்பும் ஆத்திரமும்

என் நண்பர் திரு சுதர்சனன் அவர்கள் கூறிய SMS சிறுகதை இது.

புதியதாக கார் ஒன்றை வாங்கிய ஒருவன், வண்டி வாங்கிய இரு தினங்கள் கழித்து தன் புது வண்டியினை ஆசையுடன் துடைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் மகன் சந்தோஷ கூச்சலிட்டுக் கொண்டே வண்டியின் அடுத்த பக்கம் செல்கிறான். சிறிது நேரம் கழித்து அப்புறத்தில் இருந்து க்ரீச் க்ரீச் என சப்தம் வருவதை கேட்டு வண்டியின் அடுத்த பக்கம் சென்று பார்க்கையில் மகன் வண்டியில் spaner ஐ வைத்து கீறிக் கொண்டு இருக்கிறான். ஆத்திரத்துடன் அவன் கையில் உள்ள spaner ஐ கொண்டே அவன் கையில் அடித்து விட, கை வீக்கம் கண்டு விட்டது என்று டாக்டரிடம் அழைத்து செல்கிறான். மகன் வலியால் அவதி படுகின்றான். அதனை காண மனம் பொறுக்காமல் வருத்தத்துடன் மருத்துவமனை விட்டு வெளியேறி, வெளியில் நிறுத்தி இருக்கும் வண்டியில் மகன் என்ன கிறுக்கியிருக்கிறான் என்று பார்க்க அதில் எழுதி இருந்தது, "I LOVE U DAD".

(கதைக்காக படம் நெட்டில் சுடப்பட்டது)

வியாழன், ஜூன் 19, 2008

எண்ணச்சிறகு

எண்ணச்சிறகு என்பது எனது எண்ணங்களின் அணிவகுப்பாய் அமையும். இதனில் நாட்டு நடப்பு உலக நடப்பு போன்றவற்றில் என் பார்வையை பதிவு செய்ய எண்ணுகின்றேன். உங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிர்பார்க்கின்றேன். என் கருத்து பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதனை சுட்டிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஆரோக்யமான விவாதத்திற்கு இத் தளம் உதவுமேயானால் அது போன்ற நல்ல விஷயம் எது இருக்க முடியும்?