போர்களத்தில் நண்பன் படுகாயமுற்றான் என ஒரு போர்வீரனுக்கு தகவல் வருகிறது. தன் நண்பனை போர்களத்தில்இருந்து அழைத்து வர கிளம்புகின்றான். அவன் தலைவன் சொல்கின்றான் உன் நண்பன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை, நீ செல்வது பயனற்றது என்றான். ஆனால் அவன் தன் நண்பனை அழைத்து வர போர்க்களம் சென்று, அவனை எடுத்து வந்தான் பிணமாக. தலைவன் சொன்னான் நான் சொன்னது சரியாயிற்றா நீ சென்றது வீண்தானே என்றான். போர்வீரன் சொன்னான், இல்லை நான் சென்றது வீணாகவில்லை. என் நண்பன் என்னை கண்டதும் நீ வருவாய் என எனக்கு தெரியும், நன்றி என்று சொல்லித்தான் மரித்து போனான் என்றான். இக்கதையினை எனது நண்பர் திரு சீனிவாசன் (Shalom Mansion) அவர்கள் அனுப்பினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக